தேவலோக பெண்களால் கூறப்பட்ட விரதம் புதாஷ்டமி விரதம். அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியாவது புதன் கிழமை அன்று வந்தால் அந்த நாள் புதாஷ்டமி எனப்படும்.
கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்தான் காணாமல் போன காளை கிடைத்தது. அவன் சகோதரிக்கும் நல்ல கணவன் கிடைத்தான். கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்ததால் அரசனானான்.கவுசிகனுடைய பெற்றொர் நரகத்தில் அவதிப்பட்டு கிடந்தார்கள் விரதத்தின் பலனால் அவனுடைய பெற்றொர் நரக வேதனையிலிருந்து விடுபட்டார்கள்.
புதாஷ்டமி விரதமிருந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம் நன் மக்கள் பேறு உண்டாகும் மரணத்துக்குப் பின் பேரின்ப வாழ்வு நிச்சயம்
கவுசிகன் என்பவன் மிக விலையுயர்ந்த எருது ஒன்றினை வளர்த்து வந்தான். அந்த எருது ஒரு சமயம் காணாமல் போனது. காணாமல் போன எருதினைத் தேடி புறப்பட்டான் கவுசிகன். கவுசிகன் தனியாகச் செல்லாமல் தனது சகோதரியையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.இருவரும் சேர்ந்து பல நாட்கள் எருதினைத் தேடினார்கள். இருவரும் அன்ன ஆகாரம் ஏதும் இன்றி இருந்தார்கள். பசி இருவரையும் வாட்டியது.இறுதியில் ஒரு குளத்தில் தேவலோகப் பெண்கள் ஜலக்ரீடை செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களிடம் சென்று தங்கள் இருவருக்கும் பசிப்பதாகவும், பசிக்கு உணவு வேண்டும் என்றும் கேட்டார்கள்.அப்போது தேவலோகப் பெண்கள் விரதம் ஒன்றைப் பற்றிச் சொல்லி அந்த விரதத்தை மேற்கொண்டால் உங்களுக்கு உணவும் கிடைக்கும். மேலும், காணாமல் போன உங்களுடைய எருதும் கிடைக்கும் என்று கூறினார்கள்.இவ்வாறு தேவலோகப் பெண்களால் கூறப்பட்ட விரதமே “புதாஷ்டமி விரதம்”. அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியானது – புதன்கிழமை அன்று வந்தால் அந்த அஷ்டமி”புதாஷ்டமி” என்றழைக்கப்படும்.அதன்படி இன்று வளர்பிறை அஷ்டமி மற்றும் புதன்கிழமை – இன்றைய தினம் புதாஷ்டமி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
இன்றைய தினத்தில் எட்டு விதமான அக்னி வழிபாடுகளுடன் அஷ்ட லட்சுமிகளையும் வழிபட வேண்டும்.எட்டு வழிபாடுகள் :-
1. விளக்கேற்றுதல்
2. ஹோமம்
3. அக்னிப் பூர்வமாகத் தயாராகும் அன்னத்தைத் தானமளித்தல்
4. ஊதுவத்தி தீபம்5. கற்பூரத் தீபம்
6. சாம்பிராணித் தீபம்
7. பல வகையான தீபங்கள் (உலோகம், மண், எலுமிச்சை தீபம் – இவைகளை கோவிலில் இறைவனின் சன்னிதானத்தில் ஏற்ற வேண்டும்). வீட்டில் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, அகல் விளக்கு ஏற்றலாம்.
8. ஓடும் நதிகளில் மிதக்கும் இலைமடக்கு ஜல தீப பூஜை (நதிகளில் இலைகளின் மேல் அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்).இவ்வாறு எட்டு வழிபாடுகள் செய்யமுடிந்தவர்கள் செய்யலாம். அல்லது வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்து, கோவில் சென்று அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.
சிவ மகா புராணத்தில் அஷ்டமி விரதம் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அஷ்டமி என்பது எட்டாவது திதி. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்த விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும். அஷ்டமி நாட்களில் தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத்தரும் அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.
சகல சௌபாக்யங்களும் தரும் விரதம் என்று சூத முனிவர் நைமிசாரண்யத்திலுள்ள முனிவர்களுக்கு கூறிய விரதம் அஷ்டமி விரதமாகும். ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்சத்து அஷ்டமியில் விரதமிருந்து பரமேஸ்வரனை பூஜிப்பதே அஷ்டமி விரதமாகும். ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமிக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன.
புதன் கிரகத்திற்கு உரித்தான எண் “ஐந்து”. இதில் அஷ்டமியும் சேர்வதால் இன்னும் கூடுதலான கால சக்திகள் – வித்யா சக்திகளுடன் சேர்ந்து பல நற்பலன்களை வாரி வழங்குகின்றன.இன்றைய தினம் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்து, திருத்தலம் சென்று, கால பைரவரையும் வழிபட்டு, விரதம் இருந்தால் மகத்தான – வளம் நிறைந்த வாழ்வு அமையும்.
ஆரோக்கியமாக உடல் குறைபாடின்றி இருக்க விரும்புவர்கள் எல்லா அஷ்டமி தினங்களிலும் விரதம் இருந்து பலன் பெறலாம்.
You must be logged in to post a comment.